என்னிறை ஈந்த இன்னருளே
நன்னபி புகழைப் பாடுகிறேன்
அண்ணலர் கீர்த்தி யோதி யோதி
என்னின் தேவைகள் நிறைக்கின்றேன்
என்னுயிரே அர்ப்பணம் என்னன்பிக்கே
என் உடலும் அர்ப்பணம் அன்னவர்க்கே
பெற்றோரும் அர்ப்பணம் எம் நபிக்கே
எல்லாமே அர்ப்பணம் அன்னவர்க்கே
நேசர் நபியின் பாசமோங்கி
தாசன் நானும் பாடுகின்றேன்
யா ரசூலல்லாஹ் வென்றுரத்து
கூவியழைத்தே மகிழ்கின்றேன்
கண்ணின் மணியாம் காஸிம் நபியின்
விண்ணுற ஓங்கும் புகழ்க கூறும்
அன்னவர் காதலர் நமக்கெப்போதும்
என்றும் மவ்த்தின் பயமேது
கப்ரில் செல்லும் போது கூட
முஸ்தபாவின் புகழ் சொல்வேன்
முஸ்தபாவின் பித்தன் இவனென்
உலகோர் கூற நான் மகிழ்வேன்
அதரம் அசைந்து பேசுந் தோறும் என்
அஹ்மதர் புகழே நிலைத்திருக்கும்
மஹ்மூதர் புகழைப் பாடி பாடி
மகிழுயர் நிலையை யடைவோமே
கண்ணியர் காதலில் தோய்ந்து தோய்ந்து
புண்ணியம் பெற்றார் ஷெய்க் சஅதி
மன்னவர் புகழை பாடுமவரே
“பலகல் உலா நவின்ராரே” (பலகல் உலா)