ஏகோன் தூதே
எமையாளும் வேந்தே
எம் நேசர் நபியே
எம் முயிரினு மேலே
ஆமினா பீபியின் நறு நந்தவனத்தின்
அருந்தென்றல் அணைய வீசுதே
வானும் பூவும் சல்லல்லாஹு அலைஹி
வசல்லம் கூறுதே
ரபீஉல் அவ்வல் பத்தோடிரண்டில்
ரஹ்மத் எம்மிடை வந்ததே
நுபுவ்வத்தின் ஒளியாய்
ரிசாலத்தின் முடிவாய்
அருங்குணக் குன்றாய்
பிறந்தார்கள் மதனி
முத்தினைப் பளிக்கும் புன்
முறுவல் பூக்கும் இன்
முகம் கண்டார் பெறுவார்கள் ஜெயமே
ஒளியே நிரம்பும் சந்திர வதனா
நிலையான ஏகன் ஹபீபான மதனீ
பாலகர் அஹ்மதர் சந்தணத் தொட்டில்
தாலாட்டுப் பாடி மகிழவே வந்தார்
வானவர் கோனும் ரஹ்மத்தே ஆலம்
கண்வளர்தற்காய்
பண்பாடி திளைத்தார்
முடிவு துவக்கம் என் "ஆக்கா" அறிவார்கள்
அருகும் தூரமும் அன்னவர்க் கொன்றே
மறைவிலிருக்கும் செய்திகள் சொல்லும்
இறையோன் ஹபீப்(ஆன) எங்களின் மதனீ
ஹாமித், மஹ்மூத் இன்னும் முஹம்மது
ஹுல்வத்தான பெயர் கூறி மகிழ்வோம்
இகத்திலும் பரத்திலும்
ஈடேற்றும் தலைவர்
ஈமானுள்ளோர்க்கு
இன்னுயிரிலும் மேலாம்