|
மகிழ்ந்தே சொல்வோம் யாநபி
பணிந்தே அழைப்போம் யாநபி
சொல்வோம் யாநபி யாநபி யாநபி
அருளாளன் அல்லாஹ்வின்
பேரருளாய் அவதரித்தீர்கள்
அகிலம் எங்கும் தீனின்
அருட்சுடரை ஏற்றினீர்களே
நூராய் இலங்கும் இறையோன்
அவன் நபியாய் மகி ஜொலித்தீர்கள்
சீராய் ஜிப்ரீல் மூலம்
அருள் மறையை ஏந்தினீர்களே
மலிந்தே கிடந்தது மடமை
அதை மாய்த்திடவே உழைத்தீர்கள்
துணிந்தே விளைத்தனர் கொடுமை
அதை பொறுமையுடன் சகித்தீர்களே
இறைவன் அழைப்பினை ஏற்று
விண்ணுலகம் ஏகியே அங்கு
தனியோனை தனிமையிலே
விழி நேரில் கண்டீர்களே
பகை கூடும் அந்த நாளில்
படைத்தோனின் விதி ஏற்றீர்கள்
வரலாறுகள் போற்றும் ஹிஜ்ரா
வழி நோகச் சென்றீர்களே
தாய்குலங்கள் கரங்கள் ஏந்தி தகுதி வாழ்வு கிடைக்க வேண்டி
சேய்கள் பெற்று சாலிஹாக வளர வாழ்த்தி துஆ செய்றாரே
வயதில் மூத்த வாப்பிச்சாக்கள் தாடி நரைத்த பெரியப்பாக்கள்
வாய் திறந்து போற்றி இறையை வேண்டி துஆச் செய்து வாழ்த்துவாரே
மணக்கும் மேடை மணமேடையில் உலமாக்களும் ஆன்றோர்களும்
மணவிழா சிறக்க வாழ்த்தி குத்பா ஓதி துஆச் செய்வாரே
தூய்மை சொல்லும் நன்மை பயக்கும் அமுது பாலை தந்து மகனை
மேன்மை தாங்கி மனநிறைவாய் அழைத்துச் செல்வோம் வாரீர் வாரீர்
ஜொலிக்கும் வெள்ளி மோதிரத்தை ஜோராய் மணமகள் விரலிலேயே
மாட்டி மகிழ மணமகளின் மாண்பு தந்தை வருகிறாரே
மங்களம் பொங்க மனையும் சிறக்க மணமகள் இல்லம் நோக்கி வந்த
மணமகனை குரவையிட்டு மகிழ்வுடன் வரவேற்கிறாரே
சோப்பு சீப்பு கண்ணாடியுடனே சுகந்த அத்தர் ஒன் மேன் ஷோவும்
ஜாஸ்மின் ஜன்னத்துல் பிர்தௌஸுடனே ஜரிகை பனாரஸ் பட்டு புடவை
கொண்டை குச்சி காப்பு கம்மல் கொலுசு சேன்யோ டேப்ரிக்கார்டும்
சிங்கார விளக்கும் பாம்பே சட்டியும் சீராய் வருகுது பாருங்களேன்
நல்லோர் நபிகள் அவர் தம் தத்தம் துணைவிகளுடன் வாழ்ந்தது போல்
நல்ல வாழ்வு வாழ்ந்து சிறக்க நலமுடனே வாழ்த்துவோமே
சொல்லும் செயலும் ஒன்றிணைந்தே சோர்வு அகற்றி தூய்மை நிறைந்தே
செயல்கள் ஆற்றி இல்லறம் பேணி நல்லறம் காண வாழ்த்துகின்றோம்
சாலிஹான மக்கள் தம்மை வழங்கிட இறை வேண்டி நிற்போம்
சங்கை மிகு பரக்கத்தும் சூழ கரங்கள் ஏந்தி துஆச் செய்கின்றோம்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|