|
மக்கத்தில் மலர்ந்த மாணிக்க ரோஜாவை
சொர்க்கத்தில் நான் காண வேண்டும்
பக்கத்தில் நான் நின்று பாத மலர் காணும்
பாக்கிய நாளென்று தோன்றும் -என்
ஏக்கங்கள் தான் என்று தீரும் .( 2)
பன்னீர் மணக்கின்ற பாத மலர் எழில்
கண்ணீரின் புஷ்பங்களை காணிக்கையாய் தர வேண்டும்
முன்னர் நான் செய்த முழுதான பாவமெல்லாம்
மன்னர் உன் புன்னகையில் மூழ்கியே மறைய வேண்டும் ( 2) (மக்கத்தில்)
முத்துக்கள் மிளிர்கின்ற மோகன முக மலரை
பத்து விரல் தொட்டு பார்த்து பரவசமே பெற வேண்டும்( 2)
தேம்பிய சிறு மழலை தேனுண் டு சிரிப்பது போல்
சிந்தையில் இறைக் காண வேண்டும்
செம்மலர் அவர் ஆசி வேண்டும்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|