|
கருணை புரிந்தருளுமையா - நாளும் கஞ்ச பதம் நம்பினேன் மெய்யாய்
அருணன் விரைந்தெழுந்த வானின் மிசை நடந்த
வள்ளலே ஞானானந்த விசல பதம் கண்டுய்ய - கருணை
மெய்யோர் அவை சென்று மேதை கல்லாமலிந்த
மேதினி வாழ்வைக் கண்டு மேதகமாய் நினைந்த
பொய்மையன் என்று என்னை புறக்கணித்து தள்ளாமல்
போதமருளும் நபி நாதர் முஹம்மதுவே - கருணை
நஞ்சை அமுதமாக்கி நாரி செய் மாயம் நீக்கி
விஞ்சை மிகவுண்டாக்கும் வேந்தே நும் பாதம் நோக்கி
தஞ்சம் என வடைந்த தமியேன் தனக்கிரங்கி
தானமருளும் நபி நாதர் முஹம்மதுவே - கருணை
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|