உயிருக்குள் உயிரான உத்தமரே- எம்
உளம் சிறக்க எம் இதயம் வாருங்களேன் (2)
உம்மத்தை நினைந்துருகும் உம்மியரே
உயர் ஷபாஅத்தை உண்மையாய் தாருங்களேன்
நூருக்குள் நூரான முஹம்மதரே
எம் நான் என்னும் நிலைப் போக்க வாருங்களேன்
நூரே முஹம்மதியா எனும் ஜோதியில்
நூர்ந்தே விட வேண்டும் என் ரூஹுமே
யாம் நுழைந்திடும் இருளான மண்ணறையை
நந்தவன புஷ்பமாய் ஆக்குங்களேன்
சந்தன மணம் கமழும் சர்தார் நபி -உம்
சுந்தர ரவ்ழாவை சுற்றி வருவேன்
சுகந்தமாய் சலவாத் சலாம் உரைப்பேன்
சுபிட்சமாய் பதில் தருவீர் சீமான் நபியே
ஸிராதென்னும் பாலமது சிதராமலே
சீராக கடந்திட தாருங்களேன் (கரம்)
கண்ணைக் கவர்ந்திடும் பேரழகை
கல்பைப் பறித்திடும் வியப்பழகை
மயக்கும் மன்னரின் முக அழகை
சிரிக்கும் எம் சுந்தரர் இதழழகை
தரிசித்து உயர் கலிமா நாம் ஓதவே
தாஹாவே தயவாய் அருளுங்களேன்
ஆதியின் ரசனையில் வந்த நூரே
ஆமினா மணிவயிற்றில் மலர்ந்த பூவே
ஆயிரம் காலம் இறை ரசித்த மண்ணா
அகிலமெலாம் ஒளிவான ஜோதிக் கண்ணா
கனவிலும் நினைவிலும் காட்சி தாரீர்-எம்
தாகமும் சோகமும் போக்க வாரீர் (உயிருக்குள்)
கொஞ்சும் மழலைளின் புகலிடமே
பிஞ்சு அநாதைகளின் அடைக்கலமே
மழலைகள் செல்வமில்லா மங்கையர்க்கு
மணமான குழந்தைகள் பாக்கியமே
வயது நெடுகவும் சிறப்புமுள்ள
வாழ்வுள்ள அவ்லாதைத் தாருங்களேன்