|
முன்னோன் தன்னொளியான எம் நூரே
தன்னை அறிந்திட சொன்னவர் நீரே
எந்நாளும் பிழை பாவத்தில் மூழ்கி
எல்லையிழந்தோமே ஏற்றருள்வீரே!
புhரினில் படிந்திட்ட காரிருள் ஓட்டிட
பகலோனாய் புவி மீது பரிணமித்தீர்
பாவியாம் செய்திட்ட பாவத்தை போக்கிட
பணிந்தோமே பாதத்தில் காத்தருள்வீர்
ஏகத்துவ வாதம் ஓதியே வேற்றுமை
வேருடன் சாய்த்திட்ட வெண்மதியே
நேரிய பார்வையை நோக்கியும் மீதே
எம்மை இழந்திட கருணை செய்வீரே.
முகிழ் நானு நும் முகந்தனை அகந்தன்னில்
யான் காண தருவீரே அருள் ஞான பதியரசே
ஆதியின் ஜோதியாய் இதயத்தின் இருளோட்டும்
விழி தன்னில் நிறைந்திட்ட வெண்மதியே
ஆர்வம் மிகக் கொண்டு ஆனந்தம் பொங்கியே
அருமை நும் புகழினை துதித்திடுவோம்
நேரிய பார்வையை நோக்கியும் மீதே
எம்மை இழந்திட கருணை செய்வீரே.
ஊணில் உதிரத்தில் உணர்வில் கலந்திட்ட
உத்தமர் நீரன்றி யாரெமக்குண்டு
உடலினுள் உயிராய் ஒளிர்ந்திடும் நூராய்
மிளிர்ந்திடும் மேலான மேதையரே
தேடியே பாடிடும் வாடிய விழியினில்
தோன்றியருள்வீரே நாயகமே!
நேரிய பார்வையை நோக்கியும் மீதே
எம்மை இழந்திட கருணை செய்வீரே.
அகமிய தீன் ஞான தேனினன அனுதினம்
தெவிட்டாமல் எமக்கூட்டும் மாமலரே
யாசகம் வேண்டி வாசல் வந்தோமே
வறியோறை வாரியணைத்திடுவீர்
மிஞ்சிடும் தேட்டத்தால் கெஞ்சியே உம் நெஞ்சில்
தஞ்சம் புகுந்திட செய்திடுவீர்
நேரிய பார்வையை நோக்கியும் மீதே
எம்மை இழந்திட கருணை செய்வீரே
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|