|
(காயல்பட்டணத்தில் மறைந்திலங்கும் மாமஹான் உமர் ஒலியுல்லாஹ் அவர்களின் திருக்குமாரர் ஷெய்கு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களின் புகழ் பாடும் பதங்கள்)
புது மலர்ச் சரண மெப் -- போதியான் தரிசனம்
புவிதனில் காண்பே னையா – வல்ல
புதியோ னருள் மறை பொழியும் பூபதியெனும்
புண்ய தைக்கா வொலியே
அநு சரணங்கள்
நித்தங் கரைந் துருகுஞ் சிற்றனா னுமைத் தரி
சித்திட வருள் கோனே – யென
தத்தனீர் சற்றிரங்கி சித்திதர வணங்கி
மெத்தக் கெஞ்சுறே னானே (புது)
உம்மை யல்லாம லெனக் கன்னை தந்தை யில்லையென்
றுமக்கது தெரியாதா – தமக்
குற்ற பிள்ளை யென நீ ரித்தருணம் தயவ
ளித்திடா தினும் வாதா (புது)
அதி சவுந்திர மயிலாடக் குயில் கிளிபு
றாவன மிசை பாடும் - அந்தப்
பதி காஹிரு மறொலி பால ரப்துல் காதிறே
கதி யப்துல்லா பெறநும்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|