ஞானோ தீபா அருள்மின்
மனம் வாடும் என் கண்முன் வருமின்
மாதாவமுதது உண்ணும் பருவத்தே
வேத போதங் கண்டீர் - அம்
மாத விதி யுபவாசங் காத்துமே
மாதவம் முனைந்தீர்
பேதகங் களைந்தீர் - பேதகங் களைந்தீர் - மோன
போதமே விளைத்தீர்
மாதவத்தினரான குத்பானோர்
நீதமுள உமது காதிமாய் நின்ற - ஞானோ தீபா
உதயன் உதய இரவி அஸ்தமன
பதியில் நின்றழைத்தால் - பெரும்
ஆழிக் கடியிலும் வானின்
வளியிடையும் கூவி உமை விளித்தால்
கிலி போக்கு(ம்) முஹ்யித்தீனே !
சிஷ்யரைக் காக்கும் முஹ்யித்தீனே ! - பெருஞ்
சங்கடந்தரும் சத்துருக்களை
சங்காரிக்க வரும் சிங்கமனைய குரு – ஞானோ
அஞ்சிறையினப் பஞ்சவர்ணக் கிள்ளை
கொஞ்சிப் பரவும் பதியாம் - கரு
மஞ்சு துஞ்சிடும் இஞ்சி விரிந்திடும்
விஞ்சை வளரும் பகுதாத்
நஞ்செய் விளையும் பகுதாத் - தீனின்
இன் சொல் வளரும் பகுதாத் - தனில்
கெஞ்சி நின்றவரை "அஞ்சேல் அஞ்சேல்" என
கஞ்ச மலர்ப்பத தஞ்சந் தந்துதவும் குரு – ஞானோ
“அண்ட கோடிகளுமோர்ப் பந்தெனக் கைக்குள்
அடக்கியாள வல்லீர்
அகிலமோர் ஏழினையும் ஆடுங் கறங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
மண்டலத் தண்டரை யழைத்தரு கிருத்தியே
வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகிலெழு கடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர்
கடிதரிய சித்தெல்லாம் வல்ல நீர்
அடிமையென் கண் முன் வருக்ஷித்திலையே”
நண்டலந்திடு நாளியாவனோ- தேவரீர் நல்லடிக்காலகியும்
நற் குணம் குடி கொண்ட பாதுஷாவான குரு நாதர் முஹ்யித்தீனே