|
1. அனைத்து உலகை உன் ஆற்றலாலே
அடக்கியாளும் நாயனே
இழைத்த பாவங்கள் பொறுத்து காக்க
இறஞ்சுகின்றோம் நாயனே.
2. நிறைந்த குறையை நெஞ்சில் தேக்கி
நிற்கின்றோமே நாயனே
கறைகள் படிந்த நிலையில் வந்து
கலங்குகின்றோம் நாயனே
3. வானமீன்கள் வணங்கும் இந்த
வண்ண இரவில் நாயனே
தீனை மறந்து பாவச் சுமையை
தூக்கி வந்தோம் நாயனே.
4. துனையில்லாத அனாதையாகி
தேம்புகின்றோம் நாயனே
இனையில்லாமல் உன் வாசல் வந்தோம்
இரக்கம் காட்டு நாயனே
5. தாழைப் போட்டு செல்வரெல்லாம்
தூங்குகின்றார் நாயனே
ஏழைக் காவல் உன் வாசல் தமக்கு
ஏது கதவு நாயனே
6. இழிவு செய்த எம் கரங்கள் தம்மை
ஏந்துகின்றோம் நாயனே
அழிவுப் பாதையின் அருகில் உள்ளோம்
அணைத்து காத்தருள் நாயனே
7. தூருமலை உன்ஜோதி கண்டு
தூளாய் போனது நாயனே
தூய உனது நூரைக் காணும்
தூய்மை தருவாய் நாயனே
8. நெறியின் வழியே எனது கால்கள்
நடப்பதில்லை நாயனே
விழிகட்கோ உன் ஒளியைக் காணும்
வலிமையில்லை நாயனே
9. அண்டு வோர்க்கு வழங்கச் சொல்லி
ஆனையிட்டால் நாயனே
மண்டியிட்டு வேண்டுகின்றோம்
மானம் காத்தருள் நாயனே
10. ஆதம் இழைத்த பாவம் பொறுத்து
அன்பைச் சொரிந்தாய் நாயனே
தீதை செய்து திருந்தி வந்தோம்
தயவு காட்டு நாயனே
11. நூஹூ நபியின் கலத்தை ஒரு நாள்
கரையில் சேர்த்;தாய் நாயனே
பாவக் கடலில் மூழ்கும் எம்மை
பாது காத்தருள் நாயனே
12. நெருப்பு நபி இபுறாஹீமை
தீண்டதடுத்தாய் நாயனே
நரக நெருப்பில் நாங்கள் வீழ
நாடிடாதே நாயனே
13. பதுருப்போரில் இறுதிநபிக்கு
வெற்றி தந்தாய் நாயனே
எதிர்க்கும் ஷைத்தான் மனிதப்போரில்
எமக்கு துணை நில் நாயனே
14. உண்மையாளர் அபூபக்கர் தம்
உண்மை வேண்டும் நாயனே
தன்மை தீதியில் உயர்ந்த உமரின்
தரும நெறியருள் நாயனே
15. சிறந்த அடக்கம் நிறைந்த உஸ்மான்
செய்கை வேண்டும் நாயனே
அறிவின் வாயல் வீரர் அலியின்
ஆற்றல் வேண்டும் நாயனே
16. பெண்கள் திலகம் பாத்திமாவின்
பொறுமை வேண்டும் நாயனே
உண்மை தியாகி ஹசன் ஹூஸைனார்
உள்ளம் வேண்டும் நாயனே
17. பிலாலின் பாங்கின் இனிமையாலே
பள்ளி நிறைத்தாய் நாயனே
பாங்கு கேட்டு நாங்கள் உன்னை
பணியச் செய்வாய் நாயனே
18. தெளிந்த ஞானி இமாம் கஸ்ஸாலி
தெளிவு வேண்டும் நாயனே!
தவத்தின் சிகரம் கௌதுல் அஃலம்
தூய்மை வேண்டும் நாயனே
19. சுல்தானுல் ஆரிபீன் பொருட்டால்
சுடரை தருவாய் நாயனே!
முயீனுத்தீன் அஜ்மீர் பொருட்டால்
முக்தி தருவாய் நாயனே!
20. அபுல்ஹசன் ஷாதுலி பொருட்டால்
அமைதி தருவாய் நாயனே!
அப்துல்லாஹ் ஹத்தாது பொருட்டால்
அருளை புரிவாய் நாயனே!
21. அண்ணல் ஷாகுல் ஹமீது குத்பின்
அன்பு வேண்டும் நாயனே
கண்ணில் ஷாஹ் யூசுப் வலியின்
காட்சி வேண்டும் நாயனே
22. நபிகள் ஒலிமார் அனைவருக்காக
நல்லருள் புரி நாயனே
சுபம் வழங்கி இரண்டு லோக
சுடரை ஏற்றிடு நாயனே நாயனே
23. காதிரிய்யா ராத்திபு சபையை
காத்தருள்வாய் நாயனே
கோரிடும் என் துஆவை ஏற்று
கருணை பொழிவாய் நாயனே.
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|